Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் அரசு மகளிர் மேல்லைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டன

ஜுலை 12, 2019 06:35

கும்பகோணம்: தமிழக அரசு உத்தரவுப்படி கும்பகோணத்தில் அரசு மகளிர் மேல்லைப் பள்ளியில் பயிலும் 220 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டன.

அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தற்போது அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 220 மாணவிகளுக்கு 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினியை நகரச் செயலாளர் ராம.ராமநாதன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கவிதா ஸ்ரீதர் தலைமையாசிரியர் சாந்தி மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினர்கள்.

தலைப்புச்செய்திகள்